ஆளுமை:பத்மநாதன், இளையதம்பி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:16, 14 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பத்மநாதன், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பத்மநாதன், இளையதம்பி
தந்தை இளையதம்பி
பிறப்பு 1946.01.02
ஊர் வண்ணார்பண்ணை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இ.பத்மநாதன் (1946.01.02 - ) யாழ்ப்பாணம் வண்ணர்பண்ணையைச் சேர்ந்த கர்நாடக இசைக் கலைஞர். இவரது தந்தை இளையதம்பி. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கர்நாடக இசைத்துறையில் தன்னை ஈடுபடுத்தி வரும் இவர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் நீண்ட காலமக பக்திப் பாடல்கள், இசைக் கச்சேரிகள், நிகழ்த்தி வந்ததோடு மலேசிய நாட்டு வானொலியிலும் தனது இசைப் புலமையை பலமுறை வெளிப்படுத்தியுள்ளார்.

இளவாலை சென்.ஹென்றீஸ் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் தனிப்பட்ட முறையில் சங்கீத ஆசிரியராகப் பணியாற்றியுள்ள பத்மநாதன் அவர்கள் உடுவில் கிராமசபை நடாத்தியப் போட்டியில் முதலிடம் பெற்றமையால் 1972ஆம் ஆண்டு தாவடி மத்திய சனசமூக நிலையம் சங்கீத பத்மஶ்ரீ பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. உடுவில் பிரதேச செயலாளரால் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட இவர் மானிப்பாய் துர்க்கா மலர் வெளியீட்டு விழாவின் போது இன்னிசைக் கச்சேரிகள் செய்தமைக்காக சங்கீத லலித கானமணி என்னும் பட்டம் வழங்கப்பட்டு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 106