ஆளுமை:முருகானந்தம், நல்லரசு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முருகானந்தம், நல்லரசு
தந்தை நல்லரசு
பிறப்பு 1944.08.16
ஊர் நல்லூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ந.முருகானந்தம் (1944.08.16 - ) யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட தவில் கலைஞர். இவரது தந்தை நல்லரசு. பரம்பரை வழியாக இத்துறையில் ஈடுபாடு கொண்டு வாழ்வியலுக்கான தொழிலாக இக் கலையை இசைத்து வருமிவர் பாடசாலைப் படிப்பினை எட்டாம் ஆண்டுடன் இடை நிறுத்தி தவில் இசையினை பயில ஆரம்பித்தார். ஆரம்ப தவில் கலையை தந்தையாரிடம் கற்றரிந்தும் மேலும் தவில் வித்துவான் சின்னப் பழனியிடம் தவில் வாசிப்பின் நுணுக்கங்களை முறையாகப் பயிற்சிப் பெற்றும் பின்னர் தவில் இசையை தொழில் முறையில் மேற்கொண்டு வந்தார்.

யாழ் மாவட்டத்தில் இருக்கும் பல பிரசித்திப் பெற்ற ஆலயங்களில் உற்சவ காலங்களின் போதும், மங்கள விழாக்களின் போதும், கலை நிகழ்ச்சிகளின் போதும் தான் நிகழ்த்திய தவில் கச்சேரிகளை கணக்கிட்டு கூறமுடியாதென்கிறார். இவரது கலைப்பணியைப் பாராட்டி நல்லூர் பிரதேச கலாசாரப் பேரவை 2002ஆம் ஆண்டு இவருக்கு கலைஞானச்சுடர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 102