ஆளுமை:சந்திரமதி, சிவானந்தன்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:34, 14 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சந்திரமதி சிவானந்தன்
பிறப்பு 1942.03.22
ஊர் திருநெல்வேலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரமதி சிவானந்தன் (1942.03.22 - ) யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த கர்நாடக இசைக் கலைஞர், ஆசிரியர். இவர் வட இலங்கை சங்கீத சபைப் பரீட்சையில் வாய்ப்பாட்டு, வயலின் ஆகியவற்றின் ஆசிரியர் தரச் சான்றிதழ் பெற்று கலாவித்தகர் ஆனதோடு கல்விப் பொதுத்தராதர பரீட்சையில் சித்திப் பெற்று பின்னர் பயிற்றப்பட்ட ஆசிரியராக நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியுள்ளார்.

இவர் ஈழத்தின் தலை சிறந்த சங்கீத வித்துவான்களான இசைப் புலவர் சண்முகரத்தினம், சங்கீதபூஷணம் ரி. இராசலிங்கம், சங்கீதபூஷணம் லயனஸ் திலகநாயகம் போல், வயலின் வித்துவான் பிரம்ம ஶ்ரீ சர்வேஸ்வரசர்மா ஆகியோரிடம் மாணவியாக இருந்து முறைப்படி சங்கீத இசையைக் கற்றுத் தேறியவராவார். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், யாழ்ப்பாணத்தில் உள்ள பல்வேறு கலாமன்றங்கள் பலவற்றிலும் தனது இசைக் கச்சேரியை வழங்கியுள்ளார். இவர் 1968ஆம் ஆண்டு பத்து மாணவர்களுடன் ஆரம்பித்த கீதாஞ்சலி சங்கீத இசைக் கல்லூரி பின்னர் நூற்றுக்கான மாணவர்களை இசைத்துறையில் ஆற்றல் பெற்றவராக உருவாக்கியுள்ளது

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 96