ஆளுமை:சரஸ்வதி, பாக்கியராசா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:20, 12 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சரஸ்வதி பாக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சரஸ்வதி பாக்கியராசா
பிறப்பு 1928.04.07
ஊர் கொக்குவில்
வகை கலைஞன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரஸ்வதி பாக்கியராசா (1928.04.07 - ) சிங்கப்பூரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கலைஞர். அங்குள்ள யூனியன் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் போதே தனது ஒன்பதாவது வயது முதல் சங்கீத இசையப் பயில ஆரம்பித்தார். தென்னிந்திய இசைக் கலைஞர்களிடம் இசை பயின்று சங்கீதத்தில் ஆற்றல் மிக்கவராக விளங்கினார். 1942ஆம் ஆண்டு இடம் பெற்ற உலக மகாயுத்த ஆரம்ப நாளன்று இவரின் முதல் இசைக் கச்சேரி சிங்கப்பூர் வானொலியில் ஒலிபரப்பாகியது.

பின்னர் தனது தாயாரின் சொந்த இடமான யாழ்ப்பாணம் கொக்குவிலில் வந்து சேர்ந்து 1948ஆம் ஆண்டு முதல் கொக்குவில் இந்துக் கல்லூரியின் சங்கீத ஆசிரியராக நியமனம் பெற்றார். பின்னர் திரும்பவும் 1957ஆம் ஆண்டு சென்னை சென்று கர்நாடகம் இசைக் கல்லூரியில் இணைந்து சங்கீத வித்துவான் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். 1974ஆம் ஆண்டு இசை விரிவுரையாளராக கல்வி அமைச்சினால் தெரிவு செய்யப் பெற்றார்.

கோயில்களில் கச்சேரி செய்ய ஆரம்பித்த முதல் பெண்மணி இவராவார். இவரது இசைக் கச்சேரிகள் வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டுள்ளது. பாலர் விஹாஸ் என்ற பாலருக்கான பண்ணிசைப் பாடல் வகுப்பினை ஆரம்பித்து சிறுபிள்ளைகளையும் ஊக்குவித்தார். வட இலங்கை சங்கீத சபை நடாத்தி வரும் சங்கீத பரீட்சைகளுக்கு கடந்த முப்பது மேலாக மாணவ மாணவிகளைத் தயார்படுத்தி அவர்களுக்கு பரீட்சையில் சித்தி எய்த வழிவகை செய்து வந்தார். தொடர்ந்தும் தான் வாழும் பிரதேசத்தில் கலைப்பணி ஆற்றி வருகின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 83