ஆளுமை:கிருஷ்ணராஜா, செல்லையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:31, 11 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கிருஷ்ணராஜ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிருஷ்ணராஜா, செல்லையா
தந்தை செல்லையா
பிறப்பு 1953.10.10
ஊர் கோண்டாவில்
வகை கல்வியியலாளர், வரலார்று ஆய்வாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செ.கிருஷ்ணராஜா (1953.10.10 - ) யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த ஓர் கல்வியியலாளர், வரலாற்று ஆய்வாளார். இவரது தந்தை பெயர் செல்லையா. இவர் ஆரம்பக் கல்வி இரண்டாம் நிலைக்கல்வி என்பனவற்றை நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்திலும், கற்றுத் தேறி பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்று இந்தியாவின் மைசூர் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப்பட்டமும் பெற்றவர் ஆவார். இவர் இந்தியா சாந்திநிகேதன் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் ஆசிரிய பரீட்சார்த்தியாகவும், யாழ் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும் வரலாற்றுத்துறையில் கடமையாற்றி பின்னர் பேராசிரியராக கடமையாற்றியவர்.

ஆய்வுக் கட்டுரைகள் பத்திற்கு மேலாகவும், ஆவணப்படுத்தல், வரலாற்றுக் கண்டுபிடிப்பும், தொல்லியலும், இருபத்தேழு வரையிலும் வித்துவப் பிரசங்கம் பதினேழுக்கு மேலாகவும் இவர் எழுதியுள்ளார். யாழ் பல்கலைக்கழகம் இலங்கை வரலாற்றுத்துறை மன்றம், கடல் கடந்த தமிழர் அமையம், தனிநாயக அடிகளார் ஆய்வு அமையம், இந்திய இதிகாச சமூகம் தமிழர் தொல்லியற் கலகம் நல்லூர் பிரதேச செயலக கலாசாரப் பேரவை ஆகியவற்றில் இணைந்து செயற்பட்ட இவர் ஈழத்தில் வெளிவரும் பல சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும் வரலாற்றுத் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத் தீவகற்பகத்தில் அகழ்வாரய்வுக்குத் தேர்ந்த பகுதிகள், யாழ் மக்களின் பண்டைக் காலத் தொல்லியல், யாழ்ப்பாண இராச்சியம் என்ற கட்டுரைகள் இவர் எழுதியவற்றில் முக்கியமானவை. நல்லூர் பிரதேச செயலகம் கலைஞானச்சுடர் (2008) இந் நூலையும் இவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு பன்முனைப்படுத்தப்பட்ட வரலாற்று ரீதியான இவரது ஆய்வுகள் பல நூலாக வெளிவந்துள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 75