ஆளுமை:சிற்றம்பலம், சி. க.
பெயர் | சிற்றம்பலம், சி. க. |
பிறப்பு | 1941.10.01 |
ஊர் | அராலி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சி.க.சிற்றம்பலம் (1941.10.01 - ) யாழ்ப்பாணம் அராலியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, இந்தியாவின் பூனேய் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணி மற்றும் கலாநிதி பட்டங்களையும் பெற்ற இவர் வரித்துக் கொண்ட துறைகள் பண்டைய வரலாறும், அகழ்வாராய்ச்சியும் ஆகும்.
இவர் யாழ்.பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியராகவும், வரலாற்று துறைப்பீடத் தலைவராகவும், பல்கலைக்கழக மானியங்கள் அவை உறுப்பினராகவும் பணியாற்றினார். பண்டைய தமிழகம், யாழ்ப்பாண இராச்சியம், ஈழத்தில் இந்து சமய வரலாறு, ஈழத்து தமிழர்களின் தொன்மை போன்ற இவரால் எழுதப்பட்ட வரலாற்று ஆய்வு நூல்கள் யாழ் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு 50க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களையும், 35ஆய்வு கட்டுரைகளையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார். 1933ஆம் ஆண்டு இவரது பண்டைய தமிழகம் என்ற நூலிற்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்துள்ளதோடு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் சர்வதேச விபர மையத்தின் 21ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிவு ஜீவிகள் பட்டியலில் இவரும் இடம் பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 69