ஆளுமை:பரமேஸ்வரன், சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பரமேஸ்வரன், சுப்பிரமணியம்
தந்தை சுப்பிரமணியம்
பிறப்பு 1944.08.02
இறப்பு 1983.07.21
ஊர் புத்தூர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சு.பரமேஸ்வரன் (1944.08.02 - 1983.07.21) யாழ்ப்பாணம் புத்தூரைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் எழுத்தாளர். 1963ம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு பட்டப் படிப்பிற்காக தெரிவு செய்யப்பட்ட இவர் அங்கு தனது இலக்கியச் செயற்பாட்டை வெற்றிகரமாக நிகழ்த்தி வந்தார்.

பல்கலைக்கழக வெளியீடாக வந்த மூன்றாவது சிறுகதைத் தொகுதியான ”காலத்தின் குரல்கள்” என்ற தொகுப்பின் ஆசிரியராக இவர் இருந்ததோடு பல்கலைக்கழக தமிழ்ச் கங்க வெளியீடான ”இளங்கதிர்” என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும் விளங்கினார். இவரது ஆளுமை மிக்க செயற்பாடு அவருக்குப் பல பதவிகளை பெற்றுக் கொடுத்தது. 1969 -1972 காலப்பகுதி வரை தேசிய சேமிப்பு வங்கியின் மேற்பார்வையாளராகவும், 1977 ம் ஆண்டு தொடக்கம் 1981 ம் ஆண்டுவரை குடும்பத் திட்டமிடல் சங்கத்தின் முகாமையாளராகவும் பின்னர் செயலாற்று முகாமையாளராகவும் பதவி வகித்தார்.

தமிழ் கலைமாணி சிறப்புப் பட்டமும், தமிழ் முதுகலைமாணி பட்டமும் பெற்றுள்ள இவர் வானொலிக் கலைஞனாக நல்லதோர் எழுத்தாளனாக, ஆற்றல்மிகு நாடகக் கலைஞனாக திறமைசார் ஆய்வாளனாக விளங்கிய காரணத்தால் கலா பரமேஸ்வரன் ” என்ற பட்டப் பெயர் வழங்கப்பட்டது. நச்சினார்க்கினியாரின் இலக்கியத் திறனாய்வு” என்னும் ஆய்வினை மேற்கொண்டு முதுகலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட இவரின் ஆய்வுக் கட்டுரை இவர் இறந்த பின்னர் 2000ம் ஆண்டு தமிழ்நாடு சேலம் குயில்பண்ணை வெளியீட்டகத்தால் நூலாக வெளியிடப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 56


வெளி இணைப்புக்கள்