ஆளுமை:டேவிட், கே. ஆர்.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:19, 7 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=டேவிட், கே. ஆ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் டேவிட், கே. ஆர்.
பிறப்பு
இறப்பு 1945.07.07
ஊர் சாவகச்சேரி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கே.ஆர்.டேவிட் ( - 1945.07.07) யாழ்ப்பாணம் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் தமிழ்த் தேசிய உணர்வை தன் சிறுகதைகள், நாவல்கள், குறு நாவல்கள் மூலம் வெளிப்படுத்தியதோடு புதினம், குறும்புதினம், சிறுகதை, உருவகக்கதை, இலக்கிய, அரசியல் ஆய்வு எனப் பல்துறைகளில் எழுதி வந்துள்ளார்.

”வரலாறு அவளைத் தோற்றுவித்தது”,”பாலைவனப் பயணிகள்”, ”ஆறுகள் பின்நோக்கிப் பாய்வதில்லை”, ”வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்”, ”ஒரு பிடி மண்”, ”எழுதப்படாத வரலாறு” போன்றன இவரது படைப்புக்களாகும். இவருக்கு 2006-2008ஆம் ஆண்டுகளுக்குரிய கனகசெந்திகதா விருது, 2011 இல் கலாபூஷணம் விருது, 2013 இல் சிறந்த எழுத்தாளருக்கான இதழியல் விருது, "மண்ணின் முனகல்" என்ற சிறுகதைத் தொகுதிக்கு 2013 ஆம் ஆண்டுக்கான நாமக்கல் கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை இலக்கிய விருது, பாடுகள் என்ற சிறுகதைத் தொகுதிக்கு 2013 இற்கான தமிழியல் விருது போன்றன இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 57


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:டேவிட்,_கே._ஆர்.&oldid=160942" இருந்து மீள்விக்கப்பட்டது