நிறுவனம்:யாழ்/ நீர்வாவியடி கடையிற் சுவாமிகள் சமாதிச் சிவாலயம்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:04, 7 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ நீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ நீர்வாவியடி கடையிற் சுவாமிகள் சமாதிச் சிவாலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் நீர்வாவியடி
முகவரி நீர்வாவியடி, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

நீர்வாவியடி கடையிற் சுவாமிகள் சமாதிச் சிவாலயம் இலங்கையின் வடக்கே யாழ் மாவட்டத்தில் நீர் வளம் நிறைந்த நீர்வாவியடிக் கிராமத்திலே அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.

இவ் ஆலயம் அமைக்கப்பட்டு ஏறத்தாழ நூற்றுப்பதினைந்து ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் இன்று புது மெருகு பெற்று திகழ்கிறது. 1881ம் ஆண்டில் கடையிற் சுவாமிகள் சமாதி அடைந்த இடத்தில் 1900ம் ஆண்டில் சிவன் கோயிலுக்கு உரிய சகல பரிமாணங்களுடனும் இவ் ஆலயம் அமைக்கப்பட்டது.

இக்கோயிலானது காலப்போக்கில் பராமரிக்கப்படாமல் இருந்த நிலையில் மீண்டும் புனரமைக்கப்பட்டு 1985ஆவணி 11ம் நாள் அத்த நட்சத்திர சுபதினத்தில் பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வளங்கள்

  • நூலக எண்: 5274 பக்கங்கள் 82-86