ஆளுமை:பரராஜசிங்கம், கனகரத்தினம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பரராஜசிங்கம், கனகரத்தினம்.
தந்தை கனகரத்தினம்
பிறப்பு 1943.11.22
இறப்பு 1989.04.07
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க.பரராஜசிங்கம் (1943, நவம்பர் 22 - 1989, ஏப்ரல் 07) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவரது தந்தை பெயர் கனகரத்தினம். நல்லூர் செங்குந்தா இந்துக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியை நிறைவு செய்து பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியற் சிறப்புப் பட்டதாரியான இவர் தனது கல்லூரி ஆசிரியராகவும் பின்னர் அதிபராகவும் விளங்கிய சிவ சரவணபவான் (சிற்பி) அவர்களின் ஆசிரியத்தின் கீழ் இயங்கிய ”கலைச்செல்வி” சஞ்சிகையின் வாயிலாக எழுத்துலகில் பிரவேசித்த இவர் கல்லூரி மாணவர் சஞ்சிகையான ”சுடரொளி” யிலும் தன் எழுத்தின் தடம் பதித்தவராவார்.

துருவன் என்னும் எழுத்துலகப் புனைபெயர் கொண்ட இவரது பூ என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் அவர் மறைவின் பின் அவரது துணைவியார் செல்வராணியால் அவர்களின் மணி விழா நாளில் நூலுருப் பெற்று வெளிவந்தது.


வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 171-172
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 53

வெளி இணைப்புக்கள்