ஆளுமை:சிவசிதம்பரம், நாகலிங்கம்
பெயர் | சிவசிதம்பரம், நாகலிங்கம் |
பிறப்பு | 1962.02.21 |
ஊர் | இணுவில் |
வகை | கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நா.சிவசிதம்பரம் (1962.02.21 - ) யழ்ப்பாணம் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கவிஞன். இவரது தந்தையின் பெயர் நாகலிங்கம். இவர் ஆரம்பக் கல்வியை யாழ். இணுவில் சைவமகாஜன வித்தியாலயத்திலும், உயர் கல்வியை கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் மேற்கொண்டார். கல்விமாணிக் கற்கை நெறியை தேசிய கல்வியியற் கல்லூரியில் பூர்த்தி செய்த இவர் யாழ். கோண்டாவில் இந்து மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையற்றி தற்சமயம் கோண்டாவில் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் அதிபராக கடமையாற்றி வருகின்றார்.
இலங்கையில் வெளிவரும் தமிழ்ப் பத்திரிகைகள் பலவற்றிலும் சஞ்சிகைகளிலும் தன் கவிதை இலக்கியப் படைப்புக்கள் பலவற்றை வெளிப்படுத்தியுள்ளார். வட இலங்கை சங்கீத சபையினரின் நாடக கலாவித்தகர் என்ற பட்டம் பெற்றுள்ள இக் கவிஞர் தன் செயற்பாட்டினை இம் மண்ணில் தொடர்ந்தும் செயற்படுத்தி வருவதோடு இணுவில் கலை இலக்கிய வட்டத்தின் உபதலைவராக இருந்து சமூக இலக்கியப் பணிகளையும் ஆற்றி வருகின்றார்.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 33