ஆளுமை:சண்முகநாதபிள்ளை, கணபதிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:41, 30 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சண்முகநாதபிள்ளை, கணபதிப்பிள்ளை
தந்தை கணபதிப்பிள்ளை
பிறப்பு 1936.03.02
ஊர் நயினாதீவு
வகை கவிஞன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க.சண்முகநாதபிள்ளை (1936.03.02 - ) நயினாதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கவிஞன். இவரது தந்தையாரின் பெயர் கணபதிப்பிள்ளை. இவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அதிபராக பணியாற்றினார். இலங்கையில் வெளிவரும் தமிழ் நாளிதழ்கள், வார இதழ்களில் பலநூறு கவிதைகளையும், ஆன்மீகம், ஆய்வு என பலதுறை சார்ந்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இவர் தனது சொந்த பெயரில் மட்டுமல்லாது நயினைநாதன், ஷண்.முருகனடியான் எனும் புனைபெயர்களிலும் தனது ஆக்கங்களை வெளிப்படுத்தி உள்ளார். மரபுவழிக் கவிதைகளை படைப்பதே இவரது நோக்கமாக இருந்தது. நயினாதீவு நாகபூஷணி அம்மன் மேல் அளவில்லா பற்றுடன் வாழ்ந்த இவர் புராதனி நயினை நாகபூசணி என்ற அரிய நூலை எழுதியுள்ளார்.

அகில இலங்கை ரீதியில் அரச நிறுவனத்தின் தமிழ் இலக்கிய மாமன்றம் நடத்திய கவிதைப் போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட இவர் கொழும்புத் தமிழ்ச் சங்கம் , யழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ் மன்றம், உலக ஆசிரியர் தினம், நில அளவைத் திணைக்களம் ஆகியவை ஒழுங்கு செய்த கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பங்கு கொண்டு பரிசில்களைப் பெற்றுள்ளார். நயினை மணி பல்லவக் கலாமன்றம் இவரது இலக்கியப் பணியைப் பாராட்டி 1972ஆம் ஆண்டு இவருக்கு பொன்னடை போர்த்தி கௌரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 21


வெளி இணைப்புக்கள்