ஆளுமை:பார்வதிநாதசிவம், மகாலிங்கசிவம்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:31, 30 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பார்வதிநாதசிவம், மகாலிங்கசிவம்
தந்தை மகாலிங்கசிவம்
பிறப்பு 1936.01.14
இறப்பு 2013.03.05
ஊர் மாவிட்டபுரம்
வகை கவிஞன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ம.பார்வதிநாதசிவம் (1936.01.14 - 2013.03.05) யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த ஓர் கவிஞன். இவரது தந்தையாரின் பெயர் மகாலிங்கசிவம். இவர் சிலகாலம் ஆசிரியராக பணியாற்றினார். 1955ஆம் ஆண்டு முதல் தன் இலக்கியப் பணியை ஆரம்பித்த இவர், காலத்தால் அழியாத பல குறுங்காவியங்களை பத்திரிகையில் எழுதியுள்ளார்.

தென்னிந்திய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கற்று, புலவர் பட்டம் பெற்ற இப் பெரியாரை ஈழநாடு, உதயன், முரசொலி ஆகிய பத்திரிகைகள் தமது பணியில் அமர்த்தின. காதலும் கருணையும், இருவேறு உலகம், இரண்டு வரம் வேண்டும், இன்னும் ஒரு திங்கள், பசிப்பிணி மருத்துவன், மனங்காத்த மறக்குடிவேந்தன், தமிழ்ச்செல்வம் ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.

வித்துவசிரோன்மணி பொன்னம்பலம் பிள்ளையிடம் உரையாசிரியர் என்ற பட்டத்தை பெற்ற இவர் அமரரான சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களால் இலக்கிய மேதை எனும் பட்டதையும் பெற்றுக் கொண்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 20


வெளி இணைப்புக்கள்