ஆளுமை:கைலாசநாதன், கோபாலப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:19, 29 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Pirapakar, ஆளுமை:கைலாசநாதன், கோபாலபிள்ளை பக்கத்தை ஆளுமை:கைலாசநாதன், கோபாலப்பிள்ளை என்ற தலைப்புக...)
பெயர் | கைலாசநாதன், கோபாலப்பிள்ளை |
தந்தை | கோபாலபிள்ளை |
பிறப்பு | 1956.02.24 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | ஓவியவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கைலாசநாதன் கோபாலபிள்ளை அவர்கள் யாழ்ப்பாணம் மட்டுவிலை பிறப்பிடமாக கொண்ட ஓர் ஓவியர். கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஓவிய ஆசிரியராக பயிற்சிப் பெற்று 1982இல் வெளியேறிய இவர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றினார். தென்மராட்சி கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார்.
இவர் சிறுகதைத் தொகுப்புக்கள், கவிதைத்தொகுப்புக்கள், நாவல்களுக்கான முகப்பு ஓவியங்களை வரைந்துள்ளார். குறிப்பாக 'சமர்', 'அலை' ஆகிய சஞ்சிகைகள் மூலமும் 'திசை' பத்திரிகை மூலமும் பரவலாக அறியப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 2970 பக்கங்கள் 44-45