ஆளுமை:பிலிப்ஸ் ஒஸ்ரின் அமிர்தநாதர்
பெயர் | பிலிப்ஸ் ஒஸ்ரின் அமிர்தநாதர் |
பிறப்பு | 1923 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | ஓவியவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பிலிப்ஸ் ஒஸ்ரின் அமிர்தநாதர் அவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் ஓவியர். கலைப்புலவர் நவரத்தினத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இவர் 1955ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சிற்ப ஓவியக் கட்சிகளில் பங்குக் கொண்டவராவார்.
தொழில்நுட்பக் கல்லூரியில் பயிற்சிப் பெற்ற இவர் பின் சில காலம் இலங்கை அரசாங்கத்தின் கைத்தொழில் துறையில் போதனாசிரியராக கடமையார்றி பின்பு பரியோவான் கல்லூரியிலும் 1958ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணக் கல்லூரியிலும் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். பிரதிமை ஓவியம், நிலைப்பொருள் ஓவியம், காட்சித் சித்தரிப்பு எனப் பல வகையன ஓவியங்களை இவர் வரைந்துள்ளார்.
அமிர்தநாதர் ஒரு ஓவியர் மட்டுமல்ல, ஒரு சிற்பக் கலைஞரும் கூட இன்று இவர் கைவசம் வெண்களியினால் ஆன நடராஜர் சிலையும் களியினால் ஆன புத்தர் சிலையும் உண்டு. இவரது சிற்பங்கள் பலராலும் விதந்து போற்றப்பட்டவை. 1955 ஏப்ரலில் நடைப்பெற்ற ஓவியக் கண்காட்சியில் ராதாகிருஷ்ணன் சிலை பற்றியும், 1957இல் நடைப்பெற்ற ஓவியக்காட்சியில் இடம்பெற்ற பார்வதி சிலைப்பற்றியும் டெயிலி நியூஸ் பத்திரிகைகளில் பாராட்டுக் குறிப்புரைகள் வெளிவந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 2970 பக்கங்கள் 33-34