ஆளுமை:தருமலிங்கம், பெரியதம்பிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:44, 28 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தருமலிங்கம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தருமலிங்கம், பெரியதம்பிப்பிள்ளை
தந்தை பெரியதம்பிப்பிள்ளை
தாய் நல்லம்மா
பிறப்பு 1930.04.19
இறப்பு 1994.04.04
ஊர் குருக்கள் மடம், மட்டக்களப்பு
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பெ. தருமலிங்கம் கிழக்குமாகாணத்தின் மட்டக்களப்பு, குருக்கள்மடம் எனும் இடத்திலே புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, நல்லம்மா தம்பதியரின் மகனாக 1930 ஏப்ரல், 19ம் திகதி பிறந்தார். இவர் மண்டூர் இராம கிருஷ்ண சங்கப் பாடசாலை, மட்டக்களப்பு தூய மிக்கேல் கலாசாலையில், பேராதனை கூட்டுறவுக் கல்லூரி ஆகியவற்றில் தனது கல்வித் தகைமையை வளர்த்துக்கொண்டார்.

மட்டக்களப்பு களுதாவளை மெதடிஸ்த மிசன் பாடசாலையின் ஆங்கில ஆசிரியராகவும், கூட்டுறவுத் தலைமைப் பரிசோதகராகவும், பணியாற்றியுள்ளார். கவி ஆக்குவதில் வல்லவரான இவரது பல கட்டுரைகளும், கவிதைகளும் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. இவர் 1994 ஏப்ரல், 04ம் திகதி இயற்கை எய்தினார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 157