ஆளுமை:தருமரெத்தினம், கதிரேசு

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:11, 28 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தருமரெத்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தருமரெத்தினம், கதிரேசு
தந்தை கதிரேசு
தாய் கண்ணம்மை
பிறப்பு 1944.10.06
ஊர் தேற்றாத்தீவு, மட்டக்களப்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தேனூரான் எனும் புனைபெயர் கொண்ட க. தருமரெத்தினம் மட்டக்களப்பு தேற்றாத்தீவிலே கதிரேசு கண்ணம்மை தம்பதியரின் மகனாக 1944 ஒக்டோபர், 06ம் திகதி பிறந்தார். தேற்றாத்தீவு றோமன் கத்தோலிக்க பாடசாலையில் , மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்ற இவர் இலங்கைப் போக்குவரத்து சபையின் பரிசோதகராக பணியாற்றினார்.

அகலிகை, சாவித்திரி சுயம்வரம், நள தமயந்தி, ஜானகி கல்யாணம், கருணை கொடுத்த நாயகி, அரிச்சந்திரன் முதலான புராணந் தழுவிய நாடகங்கள், கூத்துக்களை எழுதி நெறியாள்கை செய்தவர். காடவித்த வானராசன், கடவுள் கொடுத்த தண்டனை, கண்ணீர்த் துளிகள், காடழித்த மாயவன், குடி கெடுத்த அரசன், சரிந்த இதயம், நீர் வளன், துட்ட கைமுனு, ராஜ ராஜன் முதலான சமுக வரலாறு சார்ந்த கூத்துக்கள், நாடகங்களையும் நெறியாள்கை செய்தவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 156