ஆளுமை:மகாலிங்கசிவம், வேற்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:00, 25 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மகாலிங்கசிவம், ம. வே.
தந்தை வேற்பிள்ளை
தாய் மகேஸ்வரி
பிறப்பு 1891
இறப்பு 17.02.1941
ஊர் மாவிட்டபுரம்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாவிட்புரத்தைச் சேர்ந்த குருகவி ம.வே.மகாலிங்கசிவம் அவர்கள் சிறந்த கல்வியியலாளர். கவிஞனாகவும், பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். ஆரம்பத்தில் இவர் தனது கற்றல் நிறைவு பெற்றதும் இவரது தந்தையாரால் ஆரம்பிக்கப்பட்ட காவிய பாடசாலையிலேயே இலக்கிய, இலக்கணம் திறம்பட கற்பித்து வந்தார். பின்னர் 1922 இலிருந்து தான் இறக்கும் வரை ஏறத்தாழ பதினேழு வருடங்கள் இவர் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராக கடமையாற்றினார்.

இவர் பல கவிதைகளையும், சிறுகதைகளையும் படைத்துள்ளார் ஆனபோதும் அன்னை தயை எனும் சிறுகதைத் ஒன்றே இன்று கிடைக்கின்றது. இவர் குருகவி எனவும், கற்பனைச் சுருக்கம் எனவும் அறிஞர்களால் போற்றப்பட்டவர்.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 105
  • நூலக எண்: 2443 பக்கங்கள்

வெளி இணைப்புக்கள்