நிறுவனம்:யாழ்/ இளவாலை மாரீசன்கூடல் ஶ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:51, 24 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ இளவாலை மாரீசன்கூடல் ஶ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயம்
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் இளவாலை
முகவரி மாரீசன்கூடல், இளவாலை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

மாரீசன்கூடல் சுப்பிரமணிய வித்தியாசாலையானது யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் பிரதேசத்தில் அமைந்த இளவாலை கிராமத்தில் மாரீசன்கூடல் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் வித்தியாலயமானது சைவமும் தமிழும் சுடர்விட்டெரிய வேண்டும் என்பதற்காக மாரீசன்கூடல் ஊர் மத்தியிலுள்ள வீடொன்றில் ஆரம்பமானது. ஆரம்பத்தில் வீரகத்தியார் பொன்னம்பலம், கார்த்திகேசு கந்தையா என்போரை ஆசிரியர்களாகக் கொண்டு திண்ணைப் பள்ளிக் கூடம் போன்று இது இயங்கிவந்தது.

பின்னர் சைவமக்கள் ஒன்றுகூடி தற்போதுள்ள பாடசாலையை 1930ஆம் ஆண்டு அமைத்தனர். இதன் ஆரம்ப அதிபராக வீரகத்தியார் பொன்னம்பலம் கடமையாற்றினார். 1930ஆம் ஆண்டு வைகாசி மாதம் 30அம் திகதி இது உதவி நன்கொடைப் பெறும் பாடசாலையாகப் பதிவு செய்யப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 108-109