நிறுவனம்:யாழ்/ தும்பளை நெல்லண்டை பத்திரகாளி அம்மன் கோயில்
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:35, 14 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Pirapakar, நிறுவனம்:தும்பளை தெற்கு சக்தி அம்பாள் கோவில் பக்கத்தை [[நிறுவனம்:யாழ்/ தும்பளை நெல்லண்ட...)
பெயர் | யாழ்/ தும்பளை நெல்லண்டை பத்திரகாளி அம்மன் கோயில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | தும்பளை |
முகவரி | நெல்லண்டை, தும்பளை, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
நெல்லண்டை பத்திரகாளி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் ப்குதியில் அமைந்துள்ள தும்பளை என்னும் ஊரில் நெல்லண்டை எனும் இடத்தில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் அம்மன் நெல்லண்டைப் பத்திரகாளி எனவும் “இத்திமரத்தாள்” எனவும் அழைக்கப்படுகிறது.
இங்கு “வெளிமடை” என்ற வழிபாட்டு நடைமுறையிருந்தது. “காய்மடை பூமடை போடுதல்” என்னும் வழக்கம் மக்களால் இன்றுவரை பேணப்படுகிறது. மா, பலா, வாழை என்ற முக்கனி வகைகளையும் பரவி அத்துடன் பொங்கலை படைத்து பூவும் புகையும் சொரிந்து வழிபடும் வெளிமடை ஆண்டுக்கொருமுறை நடைபெறும்.