ஆளுமை:சிறிஸ்கந்தராஜா, கனகரத்தினம். (கே. எஸ். ராஜா)

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:16, 10 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிறிஸ்கந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிறிஸ்கந்தராஜா, க. (கே. எஸ். ராஜா)
தந்தை கனகரத்தினம்
பிறப்பு
இறப்பு 1989
ஊர் காரைநகர்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கே. எஸ். ராஜா என அழைக்கப்படும் சிறிஸ்கந்தராஜா யாழ்ப்பாணம், காரைநகரில் நடுத்தர தமிழ் குடும்பத்தில் பிறந்து கொட்டடியில் வளர்ந்தார். இவரின் தந்தையார் பெயர் கனகரத்தினம். கே.எஸ். ராஜா கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார்.

பின் இலங்கை வானொலியில் இணைந்து பெரும் புகழ் படைத்திருந்தார். இதனால் இவருக்கு இலங்கையில் மட்டுமின்றி தென் இந்தியாவிலும் ரசிகர்கள் இருந்தனர். 1983 கறுப்பு யூலைக்குப் பிறகு இந்தியா சென்ற இவர் அங்கு இயங்கி வந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் இணைந்து செயற்பட்டார்.

1987 ஆம் ஆண்டில் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இலங்கை திரும்பிய இவர் இலங்கை வானொலியில் தனது பணியில் இணைந்தார். இந்நிலையில் இவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரது உடல் கொழும்பு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 350


வெளி இணைப்புக்கள்