ஆளுமை:ஜெபநேசன், சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:55, 9 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஜெபநேசன், ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெபநேசன், சுப்பிரமணியம்
தந்தை சுப்பிரமணியம்
தாய் கனகம்மா
பிறப்பு 1940.03.28
ஊர் சாவகச்சேரி
வகை சமயப் பெரியார்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணியம் ஜெபநேசன் 1940 மார்ச் 28ம் திகதி ஆசிரியர்களான சுப்பிரமணியம், கனகம்மா தம்பதியரின் மகனாக சாவகச்சேரியிலே பிறந்தார். இவர் சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியிலும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்றார்.

தனது இளங்கலைமாணிப் பட்டத்தையும், தமிழ்த்துறையிலான முதுமாணிப் பட்டத்தையும் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதிப்பட்டத்தை யாழ் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். தமிழ்நாடு இறையியற் கல்லூரியில் கற்று தத்துவத்துறையிலும், ஆங்கிலத்துறையிலும் மேலும் இரு முதுமாணிப் பட்டங்களைப் பெற்ற இவர் புகழ் பெற்ற யாழ்ப்பாணக் கல்லூரியின் முன்னைநாள் அதிபரும், தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீனத்தின் ஓய்வு பெற்ற பேராயருமாவார். மருதனார்மடம் இறையியற் கல்லூரியின் அதிபராகவும் பணிபுரிந்துள்ளார்.

பேராயர் சபாபதி குலேந்திரன், வணக்கத்துக்குரிய டானியல் பூவர் ஆகிய வாழ்க்கை வரலாற்று நூல்களையும், யாழ்ப்பாணத்துக் கிறிஸ்தவக் கவிஞர்களும் கீர்த்தனைகளும், பழையதும் புதியதும், Bible Trembled, இலங்கையிலே பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழர் சிந்தனை வளர்ச்சி, இலங்கையில் தமிழ் வளர்ச்சியும் அமெரிக்கன் மிஷனும், தமிழின் நவீனமயவாக்கமும் அமெரிக்க மிஷனும் முதலிய ஆராய்ச்சி நூல்களையும் நூல்களையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 342
  • நூலக எண்: 12171 பக்கங்கள் பின் அட்டை


வெளி இணைப்புக்கள்