ஆளுமை:சபாரட்ணம், நமசிவாயம்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:06, 8 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சபாரட்ணம், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சபாரட்ணம், நமசிவாயம்
தந்தை நமசிவாயம்
தாய் தெய்வானை
பிறப்பு 1913
ஊர் காரைநகர்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நமசிவாயம் சபாரட்ணம் வியாபாரியான அவரது தந்தை நமசிவாயத்திற்கும் , தாயார் தெய்வானைக்கும் 1913ல் காரைநகர் நடுத்தெருவில் பிறந்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியை காரைநகர் இந்துக்கல்லூரி என அழைக்கப்படும் சயம்பு பாடசாலையில் ஆரம்பித்தார். உயர்கல்வியை சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ஆகியவற்றில் பெற்றுக்கொண்டார்.

பல்கலைக்கழகத்தில் B.A.M.A, M.Lit (English) ஆகிய பட்டங்களைப் பெற்றார். இலத்தீன், ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் சிறந்த புலமை பெற்றிருந்தார். இவர் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி, காரைநகர் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.தொடர்ச்சியாக காரைநகர் இந்துக்கல்லூரியில் உப அதிபராகவும் பணியாற்றினார்.

1962ம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உப அதிபராக பணிபுரிந்து 1964ல் அதிபராகப் பதவி உயர்வு பெற்று 1971ம் ஆண்டு வரை பணிபுரிந்தார். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் Super Grade Principal ஆக உயர் பதவியில் இருந்து பெருமை பெற்றிருந்தார்.

இவர் National Education, ஊரடங்கு வாழ்வு, நமது நோக்கு, Corridors of Peace ஆகிய நூல்களை எழுதியுள்ளார். அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின் ஈழநாடு பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பணி புரிந்தார். காரைநகர் மணிவாசகர் சபை, காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றின் தலவராகவும், யாழ் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 332-333