ஆளுமை:நாகலிங்கம், நா. கா.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:24, 3 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நாகலிங்கம்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகலிங்கம், நா. கா.
பிறப்பு 18.10.1892
இறப்பு 02.04.1961
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நா.கா.நாகலிங்கம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவர் புங்குடுதீவில் புகழ் பெற்ற மூத்த வர்த்தகர் ஆவார்.

ஆரம்பத்தில் கொழும்பில் சில காலம் கடைச் சிப்பந்தி வேலை செய்த இவர் தனது 26 வயதில் பொரளையில் தனியாக கடையொன்றை ஆரம்பித்தார். பின்பு தனது சகோதரன் கா.கணபதிப்பிள்ளையுடன் சேர்ந்து தொழில் செய்த இவர் ஆறு கடைகளுக்கு சொந்தக்காரரானார். தனக்கு தேவையான செல்வத்தை இவர் தேடிக்கொண்டதும் இவரது மனம் பொதுசன வேலைகளில் ஈடுபடத் தொடங்கியது.

கொழும்பில் கதிர்காமர் யாத்திரிகர் தொண்டர் சபையை ஏற்படுத்தி அதன் முதலாவது தலைவராக பணியாற்றிய இவர் தான் பிறந்த புங்குடுதீவையும் எண்ணிப் பார்த்து அகில இலங்கை புங்குடுதீவு மகாசபை என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அத்தோடு புங்குடுதீவு கலட்டி வரசித்தி விநாயகர் ஆலயத்தை புணருத்தானம் செய்தமை, கண்ணகை அம்மன் ஆலய பரிபாலண சபைத் தலைவராக இருந்து சேவையாற்றியமை. போன்ற பல சமய சமூக சேவைகளை செய்தார்.

1929ஆம் ஆண்டு மேல் மக்கள் சரித்திரம் என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்நூலில் சேர்.பொன்.இராமநாதனின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டிருப்பதோடு நாகலிங்கம் அவர்களுடைய வாழ்க்கை வரலாறும் எழுதப்பட்டிருப்பது இவரது சேவைக்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 256