ஆளுமை:வேதக்குட்டி ஐயர்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:13, 3 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வேதக்குட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேதக்குட்டி ஐயர்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை சமயப் பெரியோர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

காரைநகரில் சைவத்தையும் தமிழையும் காத்த திரு ச. அருணாசலம் அவர்களின் நண்பரே வேதக்குட்டி ஐயர் அவர்கள். அருணாசலம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி சைவபரிபாலன வித்தியாசாலை உருவாக்குவதற்கு தேவையான நிலத்தை வேதக்குட்டி ஐயர் அவர்கள் 1890ல் தருமசாதனம் செய்து கொடுத்தார். இதனால் அப்பாடசாலை ஐயர் பள்ளிக்கூடம் என அழைக்கப்பட்டது.

இவர் பூசகர் மாத்திரமன்றி வைத்தியம், சோதிடம் ஆகிய கலைகளிலும் ஈடுபாடுடையவர். இவரது இல்லத்தின் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு மிக வயசான காலத்திலும் பூசனை செய்து வந்தார். இவர் வறிய மக்களுக்கு பிரதிபலன்பாராது மருத்துவ உதவிகள் செய்து வந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 282-283