ஆளுமை:வைத்தியநாதன், மா. க.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:49, 1 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வைத்தியநாத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வைத்தியநாதன், மா. க.
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை சமூக சேவையாளார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மா.க.வைத்தியநாதன் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். இவர் ஆரம்பக் கல்வியை இராஜேஸ்வரி வித்தியாலயத்திலும், உயர் கல்வியை இரத்தினபுரி சென் லூக்ஸ் வித்தியாலயத்திலும் கற்றார்.

தாயகத்தில் அபிமானம் கொண்டு உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட இவர் இராஜேஸ்வரி சனசமூக நிலையத் தலைவராகவும், கலட்டி வீரகத்தி விநாயகர் இணைச் செயலாளராகவும், வீராமலை முருகமூர்த்தி ஆலயத் தலைவராகவும், கண்ணகை அம்மன் கோயில் தர்மகர்த்தாவாகவும், சபை அங்கத்தவராகவும் 32 வருடங்கள் கடமையாற்றினார். அத்தோடு 1983ஆம் ஆண்டு கலவரம் நடந்த போது பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் சங்கம் அமைத்து மக்களுக்கு பல உதவிகளை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1992ஆம் ஆண்டு அப்போதைய இந்து கலாசார அமைச்சர் பி.பி.தேவராஜ் இவருக்கு கலைக்காவலன் என்ற பட்டத்தை வழங்கினார். 1993ஆம் ஆண்டு இவர் நாட்டுப் பிரச்சினை காரணமாக ஜேர்மனிக்குப் பயணமானார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 218