ஆளுமை:சதாசிவம்பிள்ளை, சி. இ.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சதாசிவம்பிள்ளை, சி. இ.
பிறப்பு 22.04.1893
ஊர் புங்குடுதீவு
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இளையப்பா உபாத்தியார் என அழைக்கப்பட்ட சி.இ.சதாசிவம்பிள்ளை அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளரும் கவிஞனும் ஆவார். இவர் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தமையால் திருஆதிரையான் என்ற புனைப்பெயரில் கவிதைகள், கட்டுரைகள் பல எழுதி வந்தார். அத்தோடு ஆசிரியராகவும் தலமை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

1953ஆம் ஆண்டு நடைப்பெற்ற புங்குடுதீவு கண்ணகியம்மன் ஆலய சிலப்பதிகார விழாவுக்கு வருகை தந்த கி.வா.ஜகநாதன், ம.பொ.சிவஞானகிராமணியார், அ.ச.ஞானசம்பந்தன், ஆ.முத்துசிவன் போன்ற தமிழக அறிஞர்கள், ஈழத்து அறிஞர்கள் மத்தியில் சதாசிவம்பிள்ளைக்கு பேராசிரியர் பட்டம் வழங்கப்பட்டது. அத்தோடு கலைப்பெருமன்றம் அம்பலவாணர் அரங்கில் நிகழ்ந்த கலை விழாவில் இவருக்கு செந்தமிழ்க் கவிமணி என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

இளமை தொட்டு கவிதை இயற்றும் ஆற்றல் பெற்ற இவர் பல தனிப்பாடல்களையும், திருவூஞ்சற் பிரபந்தம், தூது, பிள்ளைத்தமிழ் முதலிய பிரபந்தங்களையும் பாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் பிரபல ஆங்கிலக் கல்லூரிகளிற் கூடப் பழைய மாணவர் சங்கம் அமைக்கப் பெறுமுன் புங்குடுதீவு ஶ்ரீ கணேச வித்தியாசாலை பழயமாணவர் சங்கத்தினை அமைத்து இருபத்தெட்டு ஆண்டுகளாக அதன் வளச்சியில் பங்காற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 205-206