ஆளுமை:சுப்பிரமணியம், அருளம்பலம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:37, 28 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சுப்பிரமணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சுப்பிரமணியம், அருளம்பலம் |
தந்தை | அருளம்பலம் |
பிறப்பு | 10.04.1913 |
இறப்பு | 15.07.2007 |
ஊர் | புங்குடுதீவு |
வகை | கல்வியியலாளர்கள் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தம்பிமுத்து ஆசிரியர் என்ற பெயரில் புகழ் பெற்ற அருளம்பலம் சுப்பிரமணியம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புங்குடுதீவு பராசக்தி வித்தியாலயத்தில் நீண்ட காலம் அதிபராக கடமையாற்றிய இவர் அப் பாடசாலையின் வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டவராகவும், புங்குடுதீவின் கல்வி, சமய, சமூக சேவைகளில் முன்னின்று உழைத்தவராகவும் காணப்பட்டார்.
புங்குடுதீவு ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தர்மகர்த்தாவாக இருந்து அக்கோவிலின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியதோடு இவர் புங்குடுதீவில் இணக்கச் சபை செயற்பட்டுக் கொண்டிருந்த பொழுது அதன் தலைவராக இருந்து கிராமமக்கள் பலரின் சிக்கல்களை நீதியாகத் தீர்த்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 200-200A