ஆளுமை:செல்வரத்தினம், கனகசபை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வரத்தினம், கனகசபை
தாய் கனகசபை
பிறப்பு நாகம்மா
ஊர் புங்குடுதீவு
வகை கல்வியியலாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனகசபை செல்வரத்தினம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் தனது கல்லூரிப் படிப்பை சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் பயின்றார். சிறந்த ஆசிரியராக, கல்லூரி அதிபராக, சிறந்த நாடக இயக்குனராக விளங்கிய இவர் இலங்கையிலேயே சிறந்த பேச்சாளனாகவும் திகழ்ந்துள்ளார்.

1963ஆம் ஆண்டு புங்குடுதீவு ஶ்ரீ கணேஷ வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றினார். இவர் பல நாடகங்களை புங்குடுதீவில் மட்டுமல்லாது யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கொழும்பு போன்ற இடங்களில் மேடையேற்றினார். இவரது ஒரு நாடகத்தில் மறைந்த சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் வீ.என்.நவரெத்தினம் முக்கிய பங்கேற்று நடித்ததோடு அந்த நாடகத்தை நேரடியாக பார்த்த தந்தை செல்வா அவர்கள் இவருக்கு கலைஞர் செல்வம் என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 187-188