ஆளுமை:தாமோதரம்பிள்ளை, கதிர்காமர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:56, 27 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தாமோதரம்பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தாமோதரம்பிள்ளை கதிர்காமர்
தந்தை கதிர்காமர்
தாய் வள்ளியம்மை
பிறப்பு 1921
ஊர் புங்குடுதீவு
வகை இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கதிர்காமர் தாமோதரம்பிள்ளை புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் இசைக் கலைஞர். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைப்பயின்று சங்கீத பூஷணமாய் 1948ஆம் ஆண்டு முள்ளியவளை தமிழ் வித்தியாலயத்திலும் 1956ஆம் ஆண்டு முதல் புங்குடுதீவு மகா வித்தியாலயத்திலும் 25ஆண்டுகளாகச் சங்கீத ஆசிரியராக கடமையாற்றி அவ் வித்தியாலய வளர்ச்சிக்கும் அவ் வித்தியாலய மாணவர் முன்னேற்றத்திற்கும் அயராது உழைத்தவர் ஆவார்.

புங்குடுதீவு கண்ணகையம்மன் ஆலயத்தை மு.முத்தையா பிள்ளை புனருத்தாரணம் செய்து வைத்திருந்த வேளையில் ஆசிரியர் அக் கோவில் நிர்வாக சபையின் பொருளாளராய் செயலாளராய் இருந்து பல தொண்டுகள் செய்தார். இவர் ஒரு சிறந்த விடா முயற்சியுடைய விவசாயி என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 193