ஆளுமை:நாகலிங்கம், சி. க.
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:58, 27 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நாகலிங்கம்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | நாகலிங்கம், சி. க. |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | கல்வியியலாளர்கள் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சி.க.நாகலிங்கம் அவர்கள் புங்குடுதீவைச் சேர்ந்த ஓர் கல்வியியலாளர். இவர் புங்குடுதீவு ஶ்ரீ கணேச வித்தியாசாலையில் தனது ஆசிரியப் பணியைத் தொடங்கி இளைப்பாறும் வரை அங்கேயே சேவையாற்றியவர் ஆவார்.
கர்வமென்றால் என்னவென்றே அறியாத காட்சிக்கு எளியவராய் அதேவேளை சகலகாலா வல்லவனாகவும் வாழ்ந்து புங்குடுதீவின் மாட்சிக்கு வழிசமைத்த வரலாறு அன்னாருக்குரியதாகும். மரபுக் கவிதைகளை இயற்றுவதில் வல்லவராகவும், பாரம்பரிய கலைகளான வைத்தியம், சோதிடம், வானசாஸ்திரம், விவசாயம் போன்ற நுட்பங்களில் இவர் ஒரு நடம்மாடும் பல்கலைக்கழகமாகவும் திகழ்ந்தார். இவரது அளப்பருஞ் சேவைக்காகவே இவருக்கு ஆசிரியமணி என்ற பட்டம் புங்குடுதீவு இந்து இந்து இளைஞர் சங்கத்தினால் வழங்கப்பட்டது..
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 190-191