ஆளுமை:பொன் கனகசபை, அ.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பொன் கனகசபை, அ.
பிறப்பு 30.10.1917
இறப்பு 15.03.1997
ஊர் புங்குடுதீவு
வகை கல்வியியலாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்.அ.கனகசபை புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் சங்ககால இலக்கிய விமர்சகர், சைவசித்தாந்தச் செம்மல், இலக்கிய வித்தகர் என்று புகழ் பெற்றவர் ஆவார்.

பிறந்த மண்ணில் சேவையாற்ற வேண்டும் என்ற விருப்பத்தினால் 1965இல் புங்குடுதீவு மத்திய மகாவித்தியாலய தமிழ் பேராசானாய் விளங்கி தமிழ், இலக்கியம், சமயம் போன்ற பாடங்களை கற்ப்பித்து வந்தார். இவர் சிறந்த பேச்சாளராக, எழுத்தாளராக, பேராசிரியராக பல்லாயிரக்கணக்கான நன்மாணாக்கர்களை உருவாக்கியவர் ஆவார்.

புங்குடுதீவு நலன்புரிச் சங்கம், புங்குடுதீவு இளைஞர் கழகம், மகா வித்தியாலய பெற்றோர் ஆசிரிய சங்கம், இலங்கை இளைஞர் சங்கம் போன்ற பல சங்கங்களில் மிகவும் சிறப்பாக சேவையாற்றினார். ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் 1974ஆம் ஆண்டு புங்குடுதீவு இளைஞர் கழகத்தில் தனியார் கல்வி நிறுவனத்தை நிறுவி அதன் பணிப்பாளராக இருந்து கல்விச் சேவையாற்றினார். இங்கு கல்வி கற்ற மாணவர்களில் 80 வீதமான மாணவர்கள் கல்விப் பொதுச் சாதாரண பரீட்சையில் சித்தி பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சிறந்த சைவத் தமிழ் பொதுப்பணி, கல்விப் பணி, சமூகப் பணி, இறைபணியாற்றி இவர் சிறந்து விளங்கினார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 179-180
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பொன்_கனகசபை,_அ.&oldid=157202" இருந்து மீள்விக்கப்பட்டது