ஆளுமை:பேரின்பநாதன், ந.
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:43, 26 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | பேரின்பநாதன், ந. |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | கல்வியியலாளர்கள் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ந.பேரின்பநாதன் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் பொருளியல் துறையில் சிருஷ்டி கர்த்தாவாக திகழ்ந்தார்.
கேள்வியும் நிரம்பலும், நெகிழ்ச்சி கோட்பாட்டின் முக்கியத்துவம், வர்த்தகமாற்று வீதம், கோட்பாடும் நடைமுறையும், இலங்கை பொருளாதார வரலாறு போன்ற பல புகழ் பெற்ற நூல்களை எழுதியுள்ளார். பொருளியலாளன் எனும் சஞ்சிகையை நீண்ட காலம் நடத்தி வரும் இவர் கனடாவிலிருந்து வெளிவரும் 'பூவரசம் பொழுது' என்ற ஆண்டு மலரிலும் கட்டுரைகளை எழுதிவருகின்றார். இவர் எழுதிய 'புங்குடுதீவின் பொருளாதாரம் வரலாற்று ரீதியான நோக்கு' என்ற கட்டுரையே இவருடைய ஊர் அபிமானத்தை காட்டுவதாய் அமைந்துள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 177