ஆளுமை:சரவணமுத்துச் சுவாமிகள், சின்னட்டியார்.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:51, 25 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சரவணமுத்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சரவணமுத்துச் சுவாமிகள், சி.
தந்தை சின்னட்டியார்
தாய் இராமாசிப்பிள்ளை
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சி.சரவணமுத்துச் சுவாமிகள் புங்குடுதீவைச் சேர்ந்தவர் ஆவார். இவர் இளமையிலேயே தெய்வ பக்தி உடையாராய் மாணிக்கவாசகர், இராமலிங்கர், தாயுமானவர், பட்டினத்தார் பாடிய அருட்பாக்களை படிப்பதில் நாட்டமுடையவராய் வாழ்ந்து வந்தார். அத்தோடு அல்லற்பட்டு வாழும் இவ்வுலக வாழ்க்கையை வெறுத்து துறவுக் கோலங் கொண்டு பிரம்மச்சாரியாய் காந்தீய இலட்சியத்துடன் வாழ்ந்து வந்தார்.

திருவாசகத்தால் தான் பெற்ற இன்பம் ஏனையோரும் பெறச் செய்வதற்கெண்ணி திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் தெற்குப்பக்கமாக ஒரு திருவாசக மடம் அமைத்து 1958 தொடக்கம் மடத்திலேயே தங்கியிருந்து கேதீஸ்வரப் பெருமானையும் கௌரி அம்மனையும் தினமும் வழிப்பட்டு வருவதுடன் சிவனடியார்களுக்கு உதவியும் செய்தார். போர் காலத்தில் இவரது திருவாசக மடம் அழிந்து போனமையினால் இவரது உறவினர்களான அருளலிங்கம் தம்பதிகள் 2004இல் இம் மடத்தை புணருத்தாரணம் செய்து சரவணமுத்து சாமியாரின் படத்தை திறந்தார்கள். தற்சமயம் சாமியார் மறைந்து விட்ட போதிலும் அவர் அமைத்த மடம் அவருடைய பெயரைக் கூறிக் கொண்டு சிவப்பணி செய்கிறது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 137-138