ஆளுமை:சோமஸ்கந்த சிவாச்சாரியார், கந்தசாம்பசிவ

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:52, 25 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சோமஸ்கந்த ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சோமஸ்கந்த சிவாச்சாரியார், கந்தசாம்பசிவ
பிறப்பு
ஊர் நல்லூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தசாம்பசிவ சோமஸ்கந்த சிவாச்சாரியார் அவர்கள் யாழ்ப்பாணம் நல்லூர் நாயன்மார்கட்டைச் சேர்ந்த ஓர் வில்லிசைக் கலைஞராவார். இவர் சிறுவயதிலேயே அந்தண மரபுசார்ந்த குருகுலக்கல்வி முறையினைக் கற்றவர். நல்லூரினில் அந்தணச் சிறுவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த கபணதீஸ்வர குருகுலத்திலே முறைசார்ந்த குருகுல வேதாகம கல்வி பயின்று பாலபண்டித பரீட்சையிலும் தேறியவர். இத்துடன் தனது தந்தையாரிடமும் புராண இதிகாச தர்ம சாஸ்த்திர விடயங்களையும் கற்றுவந்தார். நல்ல குரல்வளம், சொற்சுத்தத்துடன் பேசுகின்ற ஆற்றல், கவிதைகள் இயற்றும் ஆற்றல், நளினமான நடனமாடுகின்ற ஆற்றல், வாத்தியங்கள் பலவற்றை மீட்டும் திறன், எழுத்தாற்றல் என்பன யாவும் தொடர்புபட்டு வளரத் தொடங்கின. இவர் குறுகிய காலத்தில் தரமான வில்லிசைக் கலைஞர்களில் ஒருவராக மிளிர்ந்தார்.

இவர் சிவாலய கிருகைகளின் உள்ளீடாகக் கொண்டிருக்கும் ஓவியம் சிற்பம் அலங்காரக் கலைகள்(சாத்துப்படி சாற்றுதல்) போன்றவற்றிலும் சிறந்து விளங்குகிறார். இவர் சோதிடக் கலையிலும் பாண்டியத்துவம் பெற்றிருக்கின்றார். ஈழநல்லூர் சிறிதேவி வில்லிசைக்குழு என்ற பெயரில் கடந்த 30 ஆண்டுகளாக கலைப்பணி ஆற்றிவரும் இவருக்கு யப்பான் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டர் வழங்கிக் கெளரவித்திருக்கின்றது. வில்லிசைக் கலாநிதி கலைமாமணி கிரியாதத்வநிதிதி உள்பட 16 பட்டங்கள் இவருக்கு கிடைத்திருக்கின்றது. இவர் மாணவர் வில்லுப்பாட்டு ஆகமச்சித்திரங்கள் 2 பாகங்கள் ககாரகணபதி தியானார்ச்சனா(சமஸ்கிருதம்) பத்திரகாளி மண்டப பூசை ஆகிய நூல்களையும் எழுதியிருக்கின்றார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 610-612