ஆளுமை:சிவப்பிரகாசம், செல்லையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவப்பிரகாசம், செல்லையா
தந்தை செல்லையா
தாய் தெய்வானை
பிறப்பு
ஊர் அளவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லையா சிவப்பிரகாசம் அவர்கள் யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த தலைசிறந்த ஓவிய, சிற்ப கலைஞராவார். ஆரம்பத்தில் திரு. ஏ. இராசையா அவர்களிடம் இக்கலைகளைப் பயின்ற இவர் 1952ஆம் ஆண்டில் இருந்து 1966ம் ஆண்டுவரை கொழும்பு அரசினர் நுண்கலைக் கல்லூரியில் சித்திரம், சிற்பம் ஆகிய இரண்டினையும் கற்று Diploma in Art என்ற பட்டத்தையும் பெற்றவர். பின்னர் யாழ் மத்திய கல்லூரியில் சித்திர ஆசிரியராகப் பணியாற்றிய இவர் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் சித்திரப் பாடத்துறையை ஆரம்பித்த போது அங்கும் சித்திரப் பாட விரிவுரையாளராகப் பணியாற்றினார். .

இவர் யாழ் மாநகரசபையில் இருக்கும் சேர்.பொன் ராமநாதனின் சிலை, வெண்கலத்தால் செய்யப்பட்ட அல்பிறட் துரையப்பா அவர்களின் சிலை, யாழ் முத்திரைச் சந்தியடியில் உள்ள சங்கிலியன் சிலை உட்பட இருபத்திரண்டுக்கும் மேற்பட்ட பிரபலங்களின் சிலைகளை அமைத்த பெருமை இவருக்கு உண்டு. இவர் ஜனாதிபதியின் தேசிய விருதான கலாபூஷணம் விருது உட்பட பன்னிரண்டுக்கும் மேலான தங்கப்பதக்கங்களைப் பெற்றிருக்கின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 594