ஆளுமை:வேலானந்தன், வேலாயுதம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:48, 21 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வேலானந்தன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேலானந்தன், வேலாயுதம்
தந்தை வேலாயுதம்
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை நாட்டியக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலாயுதம் வேலானந்தன் நெடுந்தீவைச் சேர்ந்த அகில இலங்கையில் புகழ் பெற்ற நாட்டியக்கலைஞர். இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவர் ஆவார். அத்தோடு மகாவித்தியாலயத்தில் இலங்கையில் புகழ் பெற்ற நடன ஆசிரியரான திரு.எஸ்.சுப்பையா ஆசிரியரிடம் நடனம் கற்றுப் பின் இந்தியா சென்று நடனக்கலையில் சிறந்த வித்துவான்களிடம் நடனம் பயின்று நடன வல்லுனர் ஆனார்.

இலங்கையில் நெடுந்தீவு மகா வித்தியாலயத்திலும், யாழ் மாவட்ட பாடசாலைகளிலும் நடன ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கோப்பாய் பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகளில் நடன விரிவுரையாளராகவும், வடக்கு கிழக்கு மாகாணசபைக் கல்வி அமைச்சில் கவின் கலைகளுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றினார். இவர் தனது கலைத்திறனை ஐரோப்பிய நாடுகளிலும், கனடா உட்பட்ட வட அமெரிக்க நாடுகளிலும் காண்பித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றார். இவருக்கு இலங்கையில் 2002ஆம் ஆண்டில் ஜனாதிபதி விருது வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 149