ஆளுமை:அடைக்கலமுத்து, தம்பிமுத்து

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அடைக்கலமுத்து
பிறப்பு 1918.09.15
இறப்பு 2010.10.23
ஊர் நெடுந்தீவு
வகை கவிஞன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புலவர் மாமணி வித்துவான் அடைக்கலமுத்து அவர்கள் ஓர் சிறந்த கவிஞனாவார். புலவர் அமுது என்ற பெயரில் இவர் ஒரு உலகறிந்த கவிஞராவார். இவர் பல கவிதை நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். நெஞ்சே நினை, இவ்வழிச் சென்ற இனிய மனிதன், காக்கும் கரங்கள், அன்பின் கங்கை அன்னை திரேசா, மடுமாதா காவியம், அன்னம்மாள் ஆலய வரலாறு, அமுதுவின் கவிதைகள் எனும் கவிதை நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

இவரின் கவிதைகளின் சிறப்பை பாராட்டி பல பெரியோர்களும் சங்கங்களும் இவரிற்கு சொல்லின் செல்வர், புலவர்மாமணி, முப்பணிவேந்தன், பாவேந்தன், தமிழ்க் கங்கை, செந்தமிழ்த் தென்றல், கவியரசர், மதுரகவி, புலவர் மணி போன்ற பட்டங்களை கொடுத்து கௌரவித்துள்ளனர். தான் பிறந்த தாயகம் நெடுந்தீவின் சிறப்பைப் பற்றி பல கவிதைகளில் பாடியிருப்பது இவரின் தாயகப் பற்றை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 136


வெளி இணைப்புக்கள்