ஆளுமை:சண்முகநாதன், சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சண்முகநாதன், சுப்பிரமணியம்
தந்தை சுப்பிரமணியம்
தாய் தங்கம்மா
பிறப்பு 1935.03.07
இறப்பு 1990.09.18
ஊர் வேலணை
வகை கல்விமான்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணியம் சண்முகநாதன் வேலணையை பிறப்பிடமாகக் கொண்ட கல்வியியலாளர். தாவரவியல் விஞ்ஞான பட்டதாரியான இவர் தனது ஆரம்ப கல்வியை வேலணை சரஸ்வதி வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை வேலணை மத்தியமகா வித்தியாலயத்திலும் யாழ்.இந்துக்கல்லூரியிலும் பயின்றார்.

தனது ஆசிரியப் பணியை 1959இல் ஆரம்பித்து அதிபராக, வேலணை கோட்டக் கல்வி அதிகாரியாக பணியாற்றியவர். மண்டைதீவு மகாவித்தியாலயத்தை கட்டியெழுப்பிய பெருமைக்குரியவர். அத்துடன் வடமாகாண விஞ்ஞான ஆசிரிய சங்கத்தின் வெளியீடான 'விஞ்ஞானி' இதழின் வெளியீட்டிற்கு பொறுப்பாகவும் இருந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 366-370