ஆளுமை:செல்வராசா, ஞானப்பிரகாசம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:09, 15 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=செல்வராசா ஞ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வராசா ஞானப்பிரகாசம்
தந்தை ஞானப்பிரகாசம்
பிறப்பு
ஊர் ஊர்காவற்துறை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஞானப்பிரகாசம் செல்வராசா ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார். இவர் தினகரன் பத்திரிகையில் சில கலம் பணி புரிந்தார். கத்தோலிக்கரான இவர் ஞானசௌந்தரி கதையினை நாட்டுக் கூத்து மெட்டில் அமைத்துப் பாடிய நாடகநூல் மிகப் பிரபல்யமானது ஆகும். மறவர் வழி மான்மியம், தலபுராணம் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். இவர் கத்தோலிக்க சமயத்தினரான போதும் நயினை நாகபூசணிக்கும், நாரந்தனை தான்தோன்றியம்மைக்கும், மேலைக்கரம்பன் முருகமூர்த்திக்கும் பாடல்களை பாடியமை குறிப்பிடதக்கது. தூது பிரபந்தங்களில் இவர் பாடியுள்ள நயினை நாகவிடுதூது எளிய சொற்களும் இனிய சந்த நடையும் அமையப் பெற்றது.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 16-17