ஆளுமை:அருணகிரி, வாதவூர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:08, 11 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அருணகிரி வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருணகிரி வாதவூர்
தந்தை வாதவூர்
தாய் அன்னப்பிள்ளை
பிறப்பு 1927.04.26
ஊர் வேலணை
வகை தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வாதவூர் அருணகிரி (1927 ஏப்ரல், 26. ) வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார். இவரின் மாமனார் வேலணையிலிருந்து புகையிலையை கொள்வனவு செய்து வறக்காபொலவில் வாணிபத்தில் ஈடுபட்டிருந்தார். அருணகிரி அவர்களும் வணிக நடவடிகைகளுக்காக வறக்கபொல சென்று மாமனார் வழியில் மிகக் குறுகிய காலத்தில் வறக்கபொல வாழ் அனைத்து மக்களின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவராக விளங்கினார். இவர் சுமார் 40 வருட காலமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிங்கள், முஸ்லிம், தமிழ் இனத்தவருடன் நட்புடனும் ஒற்றுமையுடனும் செயல் புரிந்தார் என்பது குறிப்பிடதக்கது. அதுமட்டுமல்லாமல் அகில இலங்கை சமாதான நீதிபதியாகவும் அரசாங்கத்தால் நியமனம் பெற்றார். சைவ சமயத்தில் அளவில்லா பற்று கொண்ட இவர் வேலணையில் பிரசித்தி பெற்று விளங்கும் அனைத்து ஆலயங்களுக்கும் நிதியுதவி வழங்கியதுடன், வேலணை மக்களுக்கு மின்சார வசதியை பெற்று கொடுத்தது போன்ற பல சமூக செவைகளையும் செய்தார் என்பதும் குறிப்பிடதக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 453-457