ஆளுமை:பசுபதிப்பிள்ளை, நா. க.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பசுபதிப்பிள்ளை, நா. க.
பிறப்பு 1902
ஊர் வேலணை
வகை தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நா.க. பசுபதிப்பிள்ளை அவர்கள் வேலணையை பிறப்பிடமாகக் கொண்ட பிரபல்யமான வர்த்தகர்களில் ஒருவர். இவர் தனது சிறிய தந்தையாரான நா.சுப்பிரமணியம் அவரின் வழிகாட்டலில் வியாபாரத்தை ஆரம்பித்து தனதுமுயற்சியினால் நுவரேலியாவிலுள்ள ஹற்றன் நகரில் ஒரு கடையையும், டிக்கோயாவில் மூன்று கடைகளையும் வாங்கி தனது உறவினர்களைக்கொண்டே நடாத்தினார். ஹற்றன், டிக்கோயா வாழ் மக்கள் இவர்களை 'N.K.P.சகோதரர்கள்' என்றே அழைத்தனர். வர்தகத்தில் சிறப்புற்று விளங்கிய இவர் சமுதாயத்திலும் அக்கறை கொண்டவராக திகழ்ந்தார் பல்வேறு இறைபணிகளோடு கல்விப்பணிகளையும் ஆற்றியுள்ளார். வேலணை மத்திய கல்லூரி (முன்னர் சேர் வைத்திலிங்கம் துரைசாமி வித்தியாலயம் என அழைக்கப்பட்டது) ஆரம்பிக்கப்படுவதில் முன்னின்று உழைத்தமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 433-434