ஆளுமை:சுந்தரமூர்த்தி, கே. ஆர்.
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:13, 24 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | சுந்தரமூர்த்தி, கே. |
தந்தை | இராசு |
தாய் | கெளரியம்மா |
பிறப்பு | 1939.09.17 |
ஊர் | இணுவில் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கே. சுந்தரமூர்த்தி (பி. 1939, செப்டெம்பர் 17) ஓர் நாதஸ்வரக் கலைஞர் ஆவார். யாழ்ப்பாணம் இணுவிலை பிற்ப்பிடமாக கொண்ட இவருடைய தந்தையார் இராசு, தாயார் கெளரியம்மா. தனது பத்தாவது வயதில் நாராயண சுவாமியிடம் நாதஸ்வரம் பயில ஆரம்பித்து பின்னர் பிரபல நாதஸ்வர மேதைகளான மாவிட்டபுரம் இராசா, V. உருத்திரபதி ஆகியோருடன் இணைந்து வாசித்து வாசிப்பின் நுட்பங்களைத் தெரிந்து கொண்டதன் பின் தென்னிந்திய நாதஸ்வரக் கலைஞர்களான திருவாவூர் ராஜரத்தினம்பிள்ளை, S.P.M. திருநாவிற்கரசு ஆகியோருடன் இணைந்து நாதஸ்வரம் வாசித்திருக்கின்றார். இவரது நாதஸ்வர இசைநுட்பங்களால் 'நாதஸ்வரஜோதி' , 'நாதஸ்வர கான கலாரத்தினம்', 'நாதஸ்வர இன்னிசை வேந்தர்' என பல சிறப்புப் பட்டங்களைப் பெற்றதோடு 2000ம் ஆண்டில் இலங்கை அரசின் கலாச்சாரப் பிரிவு வழங்கிய 'கலாபூஷணம்' பட்டத்தையும் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 565-566