ஆளுமை:சாந்தி முஹியித்தீன், முகம்மது மீராசாகிபு

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:52, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சாந்தி முஹி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சாந்தி முஹியித்தீன், முகம்மது மீராசாகிபு
பிறப்பு 1942.10.09
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சாந்தி முஹியித்தீன் (பி. 1942, அக்டோபர் 09) ஓர் எழுத்தாளரும், கவிஞருமாவார். அகமதுலெவ்வை எனும் இயற்பெயரைக் கொண்ட இவர் மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்தவர். பாவலர், காத்தான்குடிக் கவிராயர், ஷா, சாஅதி ஆகிய பெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என்பவற்றை எழுதியுள்ளார். இலக்கிய இதழ் கையெழுத்துப் பத்திரிகை முதல் பாவலர் பண்ணை வெளியிட்ட ‘பா’ என்னும் கவிதைப் பத்திரிகை வரை பல பத்திரிகைகளின் ஆசிரியராகவும், ஆலோசகராகவும் செயற்பட்டுள்ளார். இவர் பல நாடகங்களில் பங்கேற்று தனது கலைத்திறமையை வெளிக்காட்டியுள்ளார். பாவலர், இலக்கியச்சுடர், இலக்கிய வித்தகர், கலாஜோதி, இலக்கியக் காவலர் ஆகிய பட்டங்களையும், ஆளுநர் விருது, கலாபூசணம் விருதும் பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1858 பக்கங்கள் 28-34


வெளி இணைப்புக்கள்