பேச்சு:ஒலிபரப்புக்கலை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:40, 6 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("== நூல்விபரம்== ஓலிபரப்பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல்விபரம்

ஓலிபரப்புக் கலை ஒரு புதிய கலையாக வளர்ச்சியடைந்து வந்த ஒரு காலகட்டத்திலே வானொலி நிலையங்களை நடத்தும் நிர்வாகிகள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், பாடகர்கள், நடிகர்கள், என்று பல்துறைக் கலைஞர்களுக்கும் பயன்படும் வகையில் அடிப்படைத் தகவல்களைத் தரும்வகையில் இந்நூல் வெளிவந்திருக்கின்றது. வானொலித் துறையில் தான் பெற்ற அனுபவ வெளிப்பாடாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. 10 வருடகால இலங்கை வானொலி அனுபவமும், இரண்டரை வருட கால பிரித்தானிய டீடீஊ அனுபவமும் தமிழக ஐரோப்பிய வானொலி நிலையங்களைப் பார்வையிட்டு உள்வாங்கிய கருத்துக்களும் இந்நூலைச் சிறந்தமுறையில் உருவாக்க இவருக்கு உதவியுள்ளன. ஐம்பதாண்டுகள் கழிந்த நிலையில் இன்றும் ஊடகத்துறையினர் தேடிப்பெற்று வாசிக்கும் இந்நூல் ஈழத்தின் வானொலித்துறையில் வெளியான முதல் தமிழ் நூலாகக் கருதப்படுகின்றது.


பதிப்பு விபரம்
ஒலிபரப்புக் கலை. சோ.சிவபாதசுந்தரம். சென்னை 18: அமுத நிலையம் பிரைவேற் லிமிட்டெட், 2வது பதிப்பு, பெப்ரவரி 1957, 1வது பதிப்பு, நொவெம்பர் 1954. (சென்னை 18: நேஷனல் ஆர்ட் பிரஸ், தேனாம்பேட்டை) xvi + 280 பக்கம், 20 தகடுகள், விலை: இந்திய ரூபா 6., அளவு: 17.5 *12 சமீ.