ஆளுமை:வேலாயுதம், கனகசபை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேலாயுதம்
தந்தை கனகசபை
தாய் தங்கம்
பிறப்பு 1917.11.17
இறப்பு 2009.05.19
ஊர் தம்பலகாமம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலாயுதம், கனகசபை (1917.11.17 - 2009.05.19) திருகோணமலை, தம்பலகாமத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், ஊடகவியலாளர், நிருபர் (வீரகேசரி பத்திரிகை). இவரது தந்தை கனகசபை; தாய் தங்கம். இவர் சிறுவயது முதலே இசை, நாடகம், கூத்து என்பவற்றில் ஆர்வத்துடன் ஈடுபட்டதன் காரணமாக பள்ளிப்படிப்பினை 5 ஆம் வகுப்புக்கு மேல் தொடர முடியாது போனது. இருந்தும் இடைவிடாத வாசிப்பு பழக்கமும், இயற்கையாகவே அமைந்த இலக்கிய ஆற்றலும் அவரை எழுத்துலகில் மிளிர வைத்தது.இவர் ஆர்மோனியம் வாசிப்பவர்.

இவரது முதலாவது சிறுகதையான 'சொல்லும் செயலும்' குமுதம் இதழில் வெளிவந்தது. தொடர்ந்து இவரது கதைகள், கவிதைகள், கட்டுரைகள், குறுநாவல்கள், செய்தி மடல்கள் என்பன காலச்சுடர், சிந்தாமணி, ஆத்மஜோதி, வீரகேசரி, மித்திரன், தினபதி, சுதந்திரன், தினகரன், தினக்குரல், சிவநெறி, குமுதம் இதழ்களில் வெளிவந்தன. தம்பலகாமத்தைப் பின்னணியாகக் கொண்டு "ரங்க நாயகியின் காதலன்" என்னும் வரலாற்றுப் புதினத்தையும், "தமிழ்கேட்க ஆசை" என்ற கட்டுரைத் தொகுப்பையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

இவரது வாழ்க்கை வரலாற்றை விரித்துரைக்கும் 'தம்பலகாமம் க.வேலாயுதம்' என்ற நூலை சித்தி அமரசிங்கம் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1008 பக்கங்கள் 11-29

வெளி இணைப்புக்கள்