ஆளுமை:கணேசன், கைலாயக்கம்பர்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:15, 20 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:கணேசன், என். கே., ஆளுமை:கணேசன், கைலாயக்கம்பர் என்ற தலைப்புக்கு நகர்த்தப்...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கணேசன்
தந்தை கைலாயக்கம்பர்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணேசன், கைலாயக்கம்பர் காரைநகரைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை கைலாயக்கம்பர். இவர் இசை வேளாளர் குடும்பத்தில் தோன்றியவர்

இவரது தந்தை கைலாயக் கம்பர் காரைநகரில் வாழ்ந்த மூத்த நாதஸ்வரக் கலைஞரும், ஈழத்துச் சிதம்பரம் எனப்படும் சிவன் கோவிலின் ஆஸ்தான வித்துவானுமாகப் பணிபுரிந்தவராவார். கணேசன் தந்தையாரிடமும், மூளாயைச் சேர்ந்த அமரர் திரு. ஆறுமுகம் அவர்களிடமும், மாவிட்டபுரம் அமரர் திரு. ராசா அவர்களிடமும் நாதஸ்வரக் கலையை முழுமையாகவும், முறையாகவும் கற்றவர்.

நாற்பது ஆண்டுகள் ஈழத்துச் சிதம்பரத்தின் ஆஸ்தான வித்துவானாகப் பணிபுரிந்த இவர், நாதஸ்வரக் கலாநிதி, நாதஸ்வர இசைமணி, நாத இசைச் சக்கரவர்த்தி எனப் பல கௌரவப் பட்டங்களைப் பெற்றுள்ளார். இலங்கை வானொலிக் கலைஞராகவும் பணி புரிந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 348-349