ஆளுமை:மரிக்கார் ராம்தாஸ், சத்தியவாகீஸ்வரன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மரிக்கார் ராம்தாஸ்
தந்தை சத்தியவாகீஸ்வரன்
தாய் நாகலட்சுமி
பிறப்பு
ஊர் இராமநாதபுரம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மரிக்கார் ராம்தாஸ், சத்தியவாகீஸ்வரன் இராமநாதபுரம், சிவகங்கையைச் சேர்ந்த நடிகர், திரைப்படக் கலைஞர். இவரது தந்தை சத்தியவாகீஸ்வரன்; தாய் நாகலட்சுமி. இவர் கலைத்துறையில் தனி இடத்தைப் பெற்றதுடன் இலங்கைத் தமிழ்ப்பட வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்புச் செய்தார். மேடை, வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் போன்ற துறைகளில் வெற்றிக்கொடியைக் காட்டியவர் இலங்கையில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் அதிகமானவற்றில் நடித்துள்ள இவர், கலைவாழ்வில் 25 வருடங்களைப் பூர்த்தி செய்தமைக்காக 1990 இல் வெள்ளி விழாக் கொண்டாடியுள்ளார். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒலிபரப்பாகிய "கோமாளிகள் கும்மாளம்" என்ற நாடகத்தொடரை எழுதியதுடன் மலையோரம் வீசும் காற்று, எதிர்பாராதது, காணிக்கை போன்ற பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்ததோடு எழுதித் தயாரித்தும் இருக்கின்றார். இவர் கோமாளிகள் படத்தில் மரிக்கார் என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மரிக்கார் என்று பெயர் இவருடன் ஒட்டிக்கொண்டது.

இவர் குத்துவிளக்கு, கோமாளிகள், ஏமாளிகள், புதிய காற்று, மாமியார் வீடு, நான் உங்கள் தோழன், நாடு போற்ற வாழ்க, Blendings (ஆங்கிலப்படம்), நொமியன மினிசு (சிங்களப் படம்), ஷார்மிளாவின் இதய ராகம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளதோடு புரோக்கர் கந்தையா, சுமதி, காதல் ஜாக்கிரதை, கலாட்டா காதல் ஆகிய மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 10571 பக்கங்கள் 121-125
  • நூலக எண்: 4428 பக்கங்கள் 195