ஆளுமை:மனோகரி, சற்குருநாதன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மனோகரி, சற்குருநாதன்
பிறப்பு 1958.01.03
ஊர் கோண்டாவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மனோகரி, சற்குருநாதன் (1958.01.03 - ) யாழ்ப்பாணம், கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக் கலைஞர். மா. ஶ்ரீரங்கநாதன், வி. வி. வைரமுத்து ஆகியோரிடம் இசைக் கலையைப் பயின்ற இவர், தனது பதின்மூன்றாவது வயதிலிருந்து இசைக்கலை ஆற்றி வருகின்றார்.

இவர் இசை நடிகராகவும் பாடல்கள் பாடுபவராகவும் திரைப்பட நடிகராகவும் தனது ஆற்றலை வெளிப்படுத்தியிருக்கின்றார். இவர் பாடிய பாடல்கள் ஒலிப்பேழைகளாகவும் இறுவெட்டுக்களாகவும் வெளிவந்துள்ளன. மேலும் இவர் ஏழாலை களபாவோடை அம்மன் ஆலயத்திலும் இலங்கை வானொலி நாடக மேடைகளிலும் பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டுக் கழகத்திலும் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலும் வேறு பல இடங்களிலும் தனது இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 76