ஆளுமை:செல்வநாயகம், தம்பிப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:27, 25 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | செல்வநாயகம் |
தந்தை | தம்பிப்பிள்ளை |
தாய் | பொன்னம்மா |
பிறப்பு | 1927.04.03 |
இறப்பு | 2010.02.11 |
ஊர் | மட்டக்களப்பு, ஆரையம்பதி |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செல்வநாயகம், தம்பிப்பிள்ளை (1927.04.03- 2010.02.11) மட்டக்களப்பு, ஆரையம்பதியைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை தம்பிப்பிள்ளை; இவரது தாய் பொன்னம்மா. இவர் ஆரைப்பற்றை நொத்தாரிஸ் பாடசாலை, காத்தான்குடி மத்திய வித்தியாலயம், சிவானந்த வித்தியாலயம் ஆகியவற்றில் கற்று, மட். அரசினர் ஆண்கள் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்று 39 வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
இவர் புலவர் மணியின் விபுலானந்தர் மீட்சிப்பத்து, புலவர் மணி கவிதைகள், பாலைக்கலி, உள்ளதும் நல்லதும் முதலான இலக்கியப் படைப்புக்களை வெளியிட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3771 பக்கங்கள் 120-121